இந்திய தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் பிரிவு 135-B-ன் படி, தேர்தல் நடைபெறும் நாளில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026, வாக்குப்பதிவு நாள் 23.04.2026 (வியாழக்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் உரிமையாளர்கள், மேற்குறிப்பிட்ட சட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி வாக்குப்பதிவு நாளான 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று தங்கள் அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குமாறு மாவட்ட ஆணையரும் சென்னை பெருநகர மாநகராட்சி தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன், தெரிவித்துள்ளார்.

