இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்; பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

செய்திகள்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்திய குடூயரசு தலைவர் முர்முவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். துணிச்சல், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட அவரது பயணம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
தனது பல ஆண்டுகால பொது வாழ்வில், அவர் தேசத்திற்கு மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்; குறிப்பாக, நலிந்த மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மிகவும் ஊக்கமளிக்கிறது. தேச சேவையில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வைப் பெறட்டும். இன்று ஒடிசாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவரைச் சந்திப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *