சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25,000 வரை அபராதம் – போக்குவரத்து துறை எச்சரிக்கை

இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. சனி-ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கட்கிழமை தீபாவளி விழாவாக இருப்பதால், வெளியூர் வாழும் பலர் இன்று தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் தொடங்கியுள்ளனர்.இதையொட்டி, தீபாவளி பருவத்தில் சொந்த வாகனங்களோடு கூட்டு வாடகை சேவையாக பலர் பயணிகளை ஏற்றுவதற்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போக்குவரத்து போலீசார் இதனை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது: உரிமம் இல்லாமல் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தி பயணிகளை ஏற்றினால் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *