புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடப்பதாக கூறி கடந்த 2012ம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]

மேலும் படிக்க

மத்திய பிரதேசத்தில் 500 வாக்காளர் அட்டைகள் குளத்தில் வீசப்பட்டதால் பரபரப்பு.

மத்திய பிரதேசத்தில்  குளத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதால், தேர்தல் முறைக்கேடு குறித்து அதிக  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜாவர் நகரின் 15வது வார்டில், ராஜா தலாப் குளத்தில், நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுத்தம் […]

மேலும் படிக்க

எச்1பி விசா கட்டண உயர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிபர் டிரம்ப் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரை கொண்ட கூட்டமைப்பு, டிரம்ப் அறிவித்துள்ள எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து […]

மேலும் படிக்க

தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் மூழ்கிய ‘ பழமையான தரைப்பாலம் வெளிவந்துள்ளது.

தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே வந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு கடலின் அழகை காண ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தனுஷ்கோடி […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் 2-கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

பீகார் மாநிலத்தில் 2-கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார் தேர்தல் அமைதியாக, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என கூறினார். பீகார் மாநிலத்தில் […]

மேலும் படிக்க

சென்னையில் தெரு நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் இணையதளம்.

சென்னை மாநகரில் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த […]

மேலும் படிக்க

உலக பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.

உலக பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுஅசத்தியுள்ளார்.நார்வே நாட்டின் ஃபோர்டே நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மகளிர் 48 கிலோ பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 199 கிலோ (ஸ்னாட்சில் 84 கிலோ, […]

மேலும் படிக்க

5 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவுக்கு அக்.26ல் நேரடி விமான சேவை.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. மேலும், இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினை முக்கிய காரணமாக இருந்தது. சீனாவின் குவாங்சோவுக்கு வரும் 26-ந்தேதி முதல் விமான […]

மேலும் படிக்க

காசா சென்ற நிவாரண கப்பல்கள் சிறைபிடிப்பு .

கசாவிற்கு உலக மக்களிடைந்து உதவிகளை கொண்டு செல்ல முயன்ற சுமார் 40க்கும் மேற்பட்ட கப்பல்களை இடைமறித்து சிறைபிடித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். பசியால் வாடும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக உணவு, மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு Global Sumud Flotilla (உலக மனிதநேய கப்பற்படை) […]

மேலும் படிக்க

திருப்பதி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி கொகாடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நிறைவு நாளான […]

மேலும் படிக்க