கன்னட திரைப்படம் காந்தாரா முதல் நாள் வசூல்; 100 கோடியை வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை

கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘காந்தாரா’. இதன் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் முன்கதையாக ‘காந்தாரா சாப்டர் 1’ உருவானது. இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவான இந்த படம், புராணங்களால் நிரம்பிய கதைக்களத்தில், கண்கவர் காட்சியமைப்புகளுடன், பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் கொண்டு செல்லும் படைப்பாக உருவாகியுள்ளது.
ரிஷப் ஷெட்டி இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவாளராக அரவிந்த் S காஷ்யப் பணியாற்றியுள்ளார். B.அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘காந்தாரா சேப்டர் 1’ தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நேற்று (அக்.2) திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.89 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினம் என்பதால் இதன் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *