நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து திரையுலகில் பரபரப்பு.

இந்தியா சிறப்பு சினிமா செய்திகள்

மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகான் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தார். இன்று, ஜனவரி 16ம் தேதி, வியாழக்கிழமை அதிகாலை, அவர் தனது பாந்த்ரா இல்லத்தில் கொள்ளை முயற்சியின் போது இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை 2:30 மணிக்கு, கொள்ளையடிக்க வந்த ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து, நடிகரை கத்தியால் தாக்கியுள்ளார். தற்போது, சயிஃப் அலிகான் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் ஒரு தனிப்படை அமைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *