தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை கருத்தில் கொண்டு, தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மாநிலங்களின் நலன் மற்றும் பிரதிநிதித்துவத்தை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

