நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இதனையடுத்து சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சுதந்திரத் திருநாளை முன்னிட்டு இன்று சென்னை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திரத் திருநாள் சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து எம்.கிருஷ்ணசாமிகளை வழங்கிச் சிறப்பித்தார். அதன்படி, முதலில் தகைசால் தமிழர் விருதை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் எம்.கிருஷ்ணசாமிக்கு வழங்கினார். மேலும் ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

