சென்னையில் விதிகளை மீறி செயல்பட்ட ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ், ஹயாத் ரீஜன்ஸி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன.
ஆனால், அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், அவர்களுக்கு மதுபானங்கள் விநியோகம் செய்தல் ஆகிய குற்றங்கள் நடப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் விதிமுறைகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வந்த இந்த 5 ஹோட்டல்களின் மதுபானக்கூட உரிமை, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
