விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது எனவும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீது 24-ம் […]

மேலும் படிக்க

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மறுதேர்வு; தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் பதில்

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில், ஒரே மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்ததும், கருணை மதிப்பெண் […]

மேலும் படிக்க

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்; தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என விஜயபிரபாகர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, விருதுநகர் தொகுதியில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய […]

மேலும் படிக்க

குவைத் நாட்டில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 40பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் உயிரிழந்ததை அடுத்து வெளியுறவு இணை அமைச்சர் அந்நாட்டுக்கு விரைகிறார். பிரதமர் மோடி உத்தரவின் பேரில் வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங் குவைத் விரைகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, குவைத்தில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார் தவெக தலைவர் நடிகர் விஜய்

அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேச உள்ளார். அதில் அரசியல் பேச்சு இடம் பெற வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதி […]

மேலும் படிக்க

இந்தியாவின் பிரதமராக முன்றாவது முறையாக மோடி பதவியேற்றுக் கொண்டார்; குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி இன்றிரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார். அவருடன், முதல்கட்டமாக 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் […]

மேலும் படிக்க

யானைகள் உயிரிழப்பு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை; மின்வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மின்வேலியில் யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்தால் மின்வாரியத்திற்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஓசூர், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மின்வேலிகளில் யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் ; அரசு தலைமை காஜி அறிவிப்பு

இன்று பரவலாக பிறை தென்பட்டதால் தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும்கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின்முக்கியமான பண்டிகைகளில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் ஜூன் 24ல் தொடங்கும்; சட்டமன்றத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டதால் கடந்த 3 மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஜூன் 24ஆம் தேதி […]

மேலும் படிக்க

வாகனங்களில் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது; மீறினால் வாகனங்கள் பரிமுதல் செய்யப்படும்

சென்னை நகரில் தனிநபர் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற உத்தரவை தமிழகம் […]

மேலும் படிக்க