பொங்கல் பரிசுத் தொகுப்புகள்: ஜனவரி 8-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 3,000 ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 8, 2026 அன்று சென்னை மாநகரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை போன்ற பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளன. தற்போது கரும்பு கொள்முதல் பணியும் நடைபெற்று வருகிறது.பொங்கல் பரிசு வழங்கும் பணிக்காக வீடுகளுக்கே சென்று டோக்கன்கள் வழங்கும் வேலை நடக்கிறது. நியாயவிலைக் கடை பணியாளர்கள் வீடுகளைச் சென்று, பொங்கல் பரிசு வழங்கும் நாள் மற்றும் நேர விவரங்களுடன் டோக்கன்கள் வழங்குகிறார்கள். டோக்கன்கள் ஜனவரி 8 வரை வழங்கப்படும், பின்னர் ஜனவரி 13 வரை நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *