முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் நீதி மன்றம் வன்கொடுமை

கர்நாடக முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகின. இதைத் தொடர்ந்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 5 பெண்கள் அவருக்கு எதிராக புகார் அளித்தனர். அதன்பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. தனது வீட்டில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரஜ்வல் கைது செய்யப்பட்டார். ஹசன் தொகுதி எம்.பி.யாக இருந்தபோது பல பெண்களை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததும் அம்பலமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *