பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: வங்க தேசத்தில் புதிய மசோதா

இந்தியா சிறப்பு செய்திகள் மற்றவை முதன்மை செய்தி

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மேற்கு வங்க சட்டப் சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் ‘அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் திருத்தம்) மசோதா 2024’ மாநில சட்டசபையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மேற்கு வங்க சட்டசபை சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது.

மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்படுகிறது. மாநில சட்ட அமைச்சர் மொல்லாய் கட்டாக் இந்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தார்.

சட்டசபை விவாதத்தின் போது, முதல்வர் மம்தா பானர்ஜி, “இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க, விதிவிலக்கான மசோதா என கூறினார். கண்ணியமான நோக்கமுள்ள எவரும் இதை ஏற்றுக்கொள்வார்கள். இந்த மசோதாவில் கையெழுத்திட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில ஆளுநரை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆர்.ஜி.கார் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் வழக்கில் மாநில காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த விவகாரத்தை சிபிஐ-க்கு ஒப்படைப்போம் என்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருந்தேன்.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது சிபிஐயிடம் நீதி கேட்கிறோம். குற்றவாளிகளை சிபிஐ தூக்கிலிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இந்த மசோதாவுக்கு முழு ஆதரவைத் தெரிவித்தார்.

அதே சமயம், மசோதாவில் சில திருத்தங்களை முன்மொழிந்தார். ஆனால், அந்த திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை வலியுறுத்தி, முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பிறகு கணக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை செய்பவரின் நடத்தையின் விளைவாக பாதிக்கப்பட்டவர் கொல்லப்பட்டாலோ அல்லது உடல் ஊனமுற்றாலோ மரண தண்டனை விதிக்கப்படலாம்.

பலாத்காரம் செய்பவர்கள் மற்றும் கூட்டு பலாத்காரம் செய்பவர்கள் பரோல் இல்லாமல் சிறைவாசத்தை சந்திக்க நேரிடும் என மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *