சத்தீஸ்கர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

சத்தீஸ்கர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் பகுதியில் உள்ள துல்துலி மற்றும் நெண்டூர் ஆகிய கிராமங்களுக்கு இடையில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இன்று மதியம் 1 மணியளவில் பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சல்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட நக்சல்களிடம் இருந்து ஏ.கே.-47 உள்பட பல்வேறு துப்பாக்கிகளும், வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பஸ்தார் பகுதியில் இந்த ஆண்டு பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் மொத்தம் 171 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *