மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு கோயில் நடையை திறந்து தீபம் ஏற்றினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 27ல் மண்டல பூஜையும் ஜனவரி 14ல் மகர ஜோதி தரிசனமும் நடக்கிறது. sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸம் போர்டு அறிவித்துள்ளது.

