அமைதிக்கான நோபல் பரிசு: ஏமாற்றம் அடைந்த அதிபர் டிரம்ப்.

அமெரிக்கா அரசியல் ஆளுமை/விருது உலகம் சிறப்பு செய்திகள்

2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த அரசியல்வாதி மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காக மரியா விற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்தியா – பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் தமக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வந்த நிலையில்  அமைதிக்கான நோபல் பரிசு வேறொருவருக்கு அறிவிக்கப்பட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *