CMS-03 செயற்கைக்கோள் நவம்பர் 2ல் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

இந்தியா உலகம் கண்டுபிடிப்பு சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி விண்வெளி சார்ந்தவை

இஸ்ரோ அறிவித்ததன்படி, கடலோர எல்லைகள் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட CMS-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம்-3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.நாட்டின் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த இதுவரை 48 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் அனுப்பியுள்ளது. 2013ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிவடைவதால், அதற்குப் பதிலாக சுமார் ₹1,600 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அதிநவீன CMS-03 செயற்கைக்கோள் தற்போது தயாராகியுள்ளது.இந்த செயற்கைக்கோள் 4,400 கிலோ எடையுடையது என்பதால், இதுவரை புவிவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்டதாகும். இதில் மல்டி-பேண்ட் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் உள்ளன.இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு பணிகள், கடலோர எல்லை பாதுகாப்பு, போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த செயற்கைக்கோள் பயன்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *