பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை நகரில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காமராஜரின் புகழை நினைவுகூர்ந்தனர்.தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்ற காமராஜர், கல்வி வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அளித்த பங்களிப்புகளால் இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். குறிப்பாக ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் ஆயிரக்கணக்கான பள்ளிகளை தொடங்கியதோடு, பள்ளி விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.”கல்விக்கண் திறந்த தலைவர்” என்று போற்றப்படும் காமராஜரின் கொள்கைகள் மற்றும் சேவைகள் இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டியாக உள்ளன. அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அவரது சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை தெரிவித்தனர்.

