இந்திய ராணுவத்தில் நாகாஸ்திரா-1 தற்கொலைப்படை ட்ரோன் சேர்ப்பு; எதிரிகளின் இலக்கை கச்சிதமாக தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

எதிரிகளின் இலக்கை கச்சிதமாக தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா-1 என்ற தற்கொலைப்படை டிரோன் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாகாஸ்திரா-1 என்ற ராணுவ டிரோனை மனிதர்கள் எளிதில் எடுத்துச்செல்ல முடியும். 9 கிலோ எடை கொண்ட நாகாஸ்திரா டிரோன், வானில் 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. 30 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா டிரோன்கள் 200 மீட்டர் உயரம் வரை வானில் எளிதாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நாக்பூரைச் சேர்ந்த சோலார் என்ற நிறுவனம் இந்த புதிய டிரோன்களை வடிவமைத்துள்ளது. முதல்கட்டமாக 120 டிரோன்கள் இந்திய ராணுவத்திடம் அளிக்கப்பட்டுள்ளன. இரவு பகலாக கண்காணிக்கவும், 1 கிலோ அளவுக்கு வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் வகையிலும் இந்த டிரோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *