கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி நிர்வாகிகளிடம், இரண்டு நாட்களில் ராஜினாமா செய்யும் முடிவை அறிவித்தார். அவர், பொதுமக்கள் தனது நேர்மையை உறுதிப்படுத்தும் வரை முதல்வர் பதவியில் அமர்வதில்லை என்று தெரிவித்தார். கெஜ்ரிவால், மத்திய விசாரணை ஆணையம் (சிபிஐ) தாக்கல் செய்த alleged corruption case தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற பிறகு டெல்லியின் திஹார் சிறையிலிருந்து வெளியே வந்த இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த அறிவிப்பை அறிவித்தார். புதிய முதலமைச்சர் தொடர்பாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரின் முடிவு மற்றும் மேலும் பல மூத்த AAP தலைவர்களின் பெயர்கள் பரவலாக பேசப்பட்ட நிலையில் இன்று அந்த கட்சியின் கூட்டத்தில் ஒரு மனதாக தற்போதைய டெல்லி சட்டமன்ற உறுப்பினர் அதிஷி டெல்லி முதவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணிக்கு கவர்னர் வி.கே.சாக்சேனாவை சந்திக்கவுள்ளார், மேலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். டெல்லி புதிய முதல்வராக அதிஷி பதவி ஏற்கவுள்ளார். அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய, முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களைப் பற்றி விவாதிக்க ஏற்கனவே பல கூட்டங்களை நடத்தியுள்ளன. பல மூத்த AAP தலைவர்களின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டு வந்தது அதில் தற்போதைய டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களான சௌரப் பாரத்வாஜ், கெயிலாஷ் காஹ்லோட், கோபால் ராய் மற்றும் இம்ரான் ஹுசைன் , அதிஷி ஆகியோர் இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் டெல்லி முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிஷி தற்போது பல முக்கிய துறைகளின் அமைச்சராக உள்ளார், இதில் கல்வி, நிதி, வருவாய் மற்றும் சட்டம் ஆகியவை அடங்கும். மேலும் இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், டெல்லியின் பள்ளிகளில் கல்வியை மாற்றியமைப்பதற்கான ஆம் ஆத்மியின் முதன்மைப் பயிற்சியில் விரிவாகப் பணியாற்றியுள்ளார். தற்போது, டெல்லி சட்டமன்றத்தின் காலம் 2025 பிப்ரவரி 11-ல் முடிவடைய உள்ளது. 2020 பிப்ரவரி 8-ல் நடைபெற்ற கடைசி சட்டமன்ற தேர்தலில் AAP 70 உறுப்பினர்களில் 62 இடங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
