2030 ம் ஆண்டிற்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்கும் இலக்கின் ஒரு பகுதியாகும். நிலவில் சூரிய சக்தி, பேட்டரிக்களால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், அணு மின் நிலையம் அவசியமானதாக கருதப்படுகிறது. எனினும், பூமியின் வளிமண்டலம் வழியே அணுக்கதிர் பொருட்களை ஏவுவது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தும் என்று விண்வெளி நிபுணர்கள் கூறியுள்ளனர். , நிலவில் ஒருநாள் என்பது பூமியில் 4 வாரங்களுக்கு சமம். இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக வெயிலும் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக குளிரும் நிலவில் நிலவும். இதனால் சூரிய மின்சக்தியை மட்டும் நம்புவது சவாலானது என்பதால் மின்சாரம் தேவை என்பதால் நிலவில் அணுமின் நிலையம் அமைப்பது அவசியம் என கூறப்படுகிறது.

