பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். இது அவருக்கு 10வது முறை. ஆளுநர் ஆஃப்கான், நிதிஷ்குமாரிடம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அதே நேரத்தில், பாஜக சார்பில் சாம்ராட் சவுத்ரி துணை முதலமைச்சராக பதவியேற்றார். முதல்வர் பதவியேற்பு நடந்ததும், மற்ற அமைச்சர்களும் ஒருவருக்கொருவர் பதவியேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் உத்தரபிரதேசம், ஆந்திரா, டெல்லி மாநில முதல்வர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.ஐக்கிய ஜனதா தள சட்டமன்றக் குழுத் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று அவர் முதல்வர் பதவியை ஏற்றார்.

