சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு விருதை இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா பெறுகிறார்கள்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் ஷர்மா 7 போட்டிகளில் விளையாடி 314 ரன்கள் குவித்தார். இதில் மூன்று 3 அரைசதங்களும் அடக்கம். இதனை தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அபிஷேக் ஷர்மா ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதே போல், ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இந்திய மகளீர் அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *