மக்களவையில் கடும் அமளி: காங்கிரஸ் எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம்

இந்தியா–சீனா எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவத் தளபதி நரவணே தனது நூலில் கூறிய கருத்துகளை மக்களவையில் ராகுல் காந்தி மேற்கோள் காட்டி பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கூட்டணி எம்.பிக்கள் கூச்சலிட்டதால் அவை […]

மேலும் படிக்க

தவெக சார்பில் பிப்.6 முதல் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 6 முதல் தொடங்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

மேலும் படிக்க

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு; பட்ஜெட் 2026ல் அறிவிப்பு

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்துள்ளார்.2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். தனது உரையில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு […]

மேலும் படிக்க

உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று உக்ரைனின் நிப்ரோ நகரில் ரஷ்ய ராணுவம் திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுரங்க […]

மேலும் படிக்க

90 வயதில் திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிப்பு.

திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு 90 வயதில் கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தியானம், மன அமைதி மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் அவரது பேசும் புத்தகத்திற்காக (Spoken Word Album) இந்த சர்வதேச இசை விருது வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மனஅமைதி […]

மேலும் படிக்க

மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்பு.

ராஜ்யசபா எம்.பி.யும், மறைந்த அஜித் பவாரின் மனைவியுமான சுனேத்ரா பவார், இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை […]

மேலும் படிக்க

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் […]

மேலும் படிக்க

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் நேற்று விபத்தில் சிக்கியது. புனே மாவட்டம் பாராமதி பகுதியில் அஜித் பவார் சென்ற விமானம் நேற்று காலை 8.45 மணிக்கு தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் […]

மேலும் படிக்க

இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது; பிரதமர் மோடி தகவல்

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியமாகும். இருதரப்பிற்கும் இடையேயான வெளிப்படையான வர்த்தகம் தொடர்பாக நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.இதற்கிடையில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் […]

மேலும் படிக்க

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் சட்டவிரோத நுழைவு முயற்சி: அமெரிக்கா தகவல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் குறித்து அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அமைப்பு புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்த ஆண்டு ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் சட்டவிரோதமாக நுழையும்போது பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் 85,119 இந்தியர்கள் […]

மேலும் படிக்க