சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்புத் தொட்டி சரிந்து விழுந்ததன் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 ஒப்பந்த தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் உள்ளனர், இதில் இருவர் உயிரிழந்தனர். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், 50 அடி உயரத்தில் உள்ள நிலக்கரி சேமிப்புத் தொட்டியின் உடைப்பு காரணமாக கீழே விழுந்தனர்.இந்த விபத்தில் அப்பகுதியில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஸ்ரீகாந்த் (24), மனோஜ் குமார் (22), சீனிவாசன் (42), முருகன் (25) மற்றும் கௌதம் (24) ஆகிய ஐந்து பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அனல் மின் நிலையத்தின் ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு, சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தன. பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இடர்பாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளாரா என்பதைப் பார்த்து, ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிந்து விழுந்த தொட்டியை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக அனல் மின் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

