ஐபிஎல் 2025: டெல்லியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்தியா ஐபிஎல் தொடர் சிறப்பு செய்திகள் பொழுதுபோக்கு விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 63வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களை குவித்தது. 181 ஓட்டங்களை அடிக்க வேண்டும் என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் டெல்லி அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 121 ஓட்டங்களை மட்டுமே பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மற்றும் பிளே ஓப் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. டெல்லி அணி 6வது தோல்வியை சந்தித்தது, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *