தமிழ்நாட்டில் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சி போட்டியிடும் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது புதிய அரசியல் பயணம் குறித்து அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து பேசிய அண்ணாமலை, மக்களின் நலனை மையமாகக் கொண்டு ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளதாக கூறினார். தற்போதைய அரசியல் கலாச்சாரத்தில் இருந்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.மேலும், தனது கட்சியில் நிரந்தர தலைவர், நிரந்தர எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. போன்ற பதவிகள் இருக்காது என்று அவர் கூறினார். திறமை மற்றும் மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.புதிய கட்சியில் இணைய விரும்புபவர்களுக்கு அரசியல் மற்றும் நிர்வாகம் தொடர்பான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். அரசியலில் புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.அண்ணாமலையின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலை முன்னிட்டு அவரது புதிய கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மீது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது.

