தவெக அரசின் முதல் பட்ஜெட்: மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

அரசியல் செய்திகள் தமிழ்நாடு பொருளாதாரம் முதன்மை செய்தி

தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமை இருந்தாலும், மக்களின் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் அரசின் கடன் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், அதிக அளவில் வட்டி செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்:

தாய்மாமன் தங்க மோதிரம்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு.

மாணவர்களுக்கு நவீன சைக்கிள்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் நவீன சைக்கிள்கள் வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு.

பெண்களுக்கு அண்ணன் சீர்: திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி ஒதுக்கீடு.தாய் கேர் மையங்கள்: கர்ப்பிணிகளுக்கு இலவச உணவு, மருத்துவ உதவி மற்றும் தொடர் கண்காணிப்பு வசதிகளுடன் சேவை மையங்கள் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு.

வெற்றி மகளிர் ஆடுகள் திட்டம்: கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு.

மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள்: நூலகம், யோகா, தியானம் மற்றும் உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்படும்.

கறவை மாடுகள் திட்டம்: ஆண்டுதோறும் 10,000 தகுதியான பெண்களுக்கு இலவசமாக கறவை மாடுகள் வழங்க ரூ.57 கோடி ஒதுக்கீடு.

நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்: தமிழகம் முழுவதும் 1,000 மையங்கள் அமைத்து, கிராமங்களுக்கே சென்று இலவச பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்க ரூ.33 கோடி ஒதுக்கீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *