நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டிற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் தொடங்கியது

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை நோக்கிய பயணத்தை நாளை பிற்பகல் 2 மணி 30 நிமிடத்திற்கு தொடங்குகிறது.
நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டிற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் தொடங்கியது.
நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை விண்ணை நோக்கி பாய உள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ‘LVM 3 M-4 ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் நிறைவடைந்தன.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்திற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் இன்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கியது. கவுன்டவுன் முடிந்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, நாளை மதியம் 2:35 மணியளவில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது. நிலவுக்கு அனுப்பப்படும் 3வது விண்கலமான சந்திரயான்-3 விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.