டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.நிதி ஆயோக் கூட்டத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை குறித்து வலியுறுத்தி பேசினார்.நிர்வாகக் குழு கூட்டம் முடிந்த பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேச முதல்வர் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது.மத்திய வரியில் மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரி ஒதுக்கப்படவேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கூட்டத்திற்கு பின்னர் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது .

