சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை மீதான புகார்; ஒருவர் கைது, போலீசார் விசாரணை

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,“அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி […]

மேலும் படிக்க

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம்; சாமி தரிசனம் செய்ய சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் (டிச.19) 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு நாள்தோறும் முன்பதிவு […]

மேலும் படிக்க

பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் மாநாடு திருவண்ணாமலையில் நடந்தது

பாமக சார்பில், உழவர் மாநாடு இன்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்க நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, மேல்மா […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக குவைத் சென்றுள்ளார்

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று குவைத் பயணம் மேற்கொண்டார். இன்று மாலை அவரை வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர். வளைகுடா நாடான குவைத் நாட்டின் மன்னர் ஷேக் அல் அகமது அல் ஜாபர் அல் ஷபா […]

மேலும் படிக்க

திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை; போலீசார் கண்முன்னே நடந்த பயங்கரம்

திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவரை கொலை செய்தது யார்? நீதிமன்றத்திற்குள் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டது எப்படி? போலீசார் கண் முன்னே நடந்த கொலையின் பின்னணி […]

மேலும் படிக்க

புதுச்சேரியில் இருந்து மீண்டும் தொடங்கிய பயணிகள் விமான சேவை; பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு தினசரி விமானங்கள் தொடக்கம்

புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து 8 மாதங்களுக்கு பிறகு இன்று விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்கி வந்தது. அதிக கட்டணம் காரணமாகபொது மக்களிடம் போதிய வரவேற்பு […]

மேலும் படிக்க

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.இதனைத் […]

மேலும் படிக்க

புற்றுநோய்க்கு தடுப்பூசி, 2025ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் இலவசம்; ரஷ்யா அறிவிப்பு

கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்திருப்பதாகவும் இது 2025 முதல் இலவசமாக சந்தையில் கிடைக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. எம்ஆர்என்ஏ (mRNA) அடிப்படையிலான இந்த தடுப்பூசி, கேன்சர் நோயை குணப்படுத்தும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளதுஉலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, […]

மேலும் படிக்க

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா; மீனவர் பிரச்சனையை தீர்க்க விருப்பம் என தகவல்

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக அனுரகுமார திசநாயகா நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் […]

மேலும் படிக்க

நாடு திரும்பினார் உலகச் சாம்பியன் குகேஷ்; சென்னையில் உற்சாக வரவேற்பு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை வந்த குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அண்மையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் […]

மேலும் படிக்க