மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதல் பரிசு பெற்றார். மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. அவனியாபுரம் ஜல்லிகட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்தின. ஆன்லைன் மூலம் தகுதி சான்றிதழ் பெற்ற காளைகள் பதியப்பட்டு அதில் 1100 காளைகள் பங்கேற்க டோக்கன் ஆன் லைன் மூலம் வழங்கப்பட்டது.அதே போல் மாடுபிடிவீர்கள் ஆன்லைன் மூலம் பதியப்பட்ட 900 பேருக்கு பங்கேற்க ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டது. இதனை அடுத்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்த பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என 10 சுற்றுகள் நடத்தப்பட்டதில் 800க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன . மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றுக்கு 50 பேர் என பேர் களமிறங்கினர். 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்திக் முதல் பரிசு பெற்றார். குன்னத்தூர் அரவிந்த் 15 காளைகளை அடக்கி 2-வது பரிசு பெற்றார். திருப்புவனத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முரளிதரன் 13 காளைகளை அடக்கி 3-வது பரிசு பெற்றார். சிறந்த காளைக் கான முதல் பரிசாக டிராக்டர், கன்றுடன் கூடிய பசுமாடு வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு ரொக்கம், தங்க காசு, பேன், கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
