இந்தோனேஷிய அதிபர் சிறப்பு விருந்தினராக குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இந்தியா வருகை.

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

இந்தியாவின் 76வது குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, ராணுவ அணிவகுப்பு நடைபெறும். குடியரசு தின விழாவில், வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 73 வயதான அவர், முன்னாள் ராணுவ தளபதி ஆவார்.மேலும் கடந்த அக்டோபர் மாதம் அந்நாட்டு ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அவர் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக, ஜனவரி 23ம் தேதி வியாழக்கிழமை இரவு டெல்லி வந்தடைந்தார், அவரை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கிரெட்டா உற்சாகமாக வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, ராஷ்டிரிய பவனில் ஜனவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தோனேசிய பிரதமர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்கவுள்ளார். இந்திய சுற்றுப்பயணத்தின் போது, இந்தோனேசிய ஜனாதிபதி கூறியதாவது, “இந்தியாவின் 76வது குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவுள்ளேன். இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடியை சந்தித்து, பாதுகாப்பு, கடல்சார் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளேன்” என அவர் தெரிவித்தார். இந்திய பயணத்தை முடித்த பிறகு, இந்தோனேசிய பிரதமர் பிரபோவோ சுபியாண்டோ மலேசியா நோக்கி புறப்பட்டு செல்லவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *