அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி டிசம்பர் 13 முதல் 15 வரை இந்தியாவில் ரசிகர்களை சந்திக்க வர திட்டமிடப்பட்டிருந்தார். அவருடன் மார்டினெஸ், அலிஸ்டர் உள்ளிட்ட பல வீரர்கள் வரவிர்ந்திருந்தனர்.இதற்கு முன், நவம்பர் 17-ஆம் தேதி அவர் அர்ஜென்டினா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையேயான நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாட இருந்தார். இதற்காக கொச்சியில் உள்ள ஸ்டேடியம் ரூ.70 கோடியில் புதுப்பிக்கப்பட்டிருந்தது.இந்த சுற்றுப்பயண ரத்து அறிவிப்பை போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தமது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது, இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

