இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் இளைஞர்களின் உலகத்தை ஆட்சி செய்கின்றன.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது. இந்நிலையில், இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இனிமேல், குறைந்தபட்சம் 1,000 Followers கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

