2025-26 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு பொருளாதாரம்

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆரம்பித்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் மார்ச் 14-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு, சட்டப்பேரவையில் 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான காரணமாக, அரசு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்யும். இதனால், இந்த பட்ஜெட்டில் மக்கள் விரும்பும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளடக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறபடுகிறது. பட்ஜெட் தாக்கல் நிகழ்வு முடிந்த பிறகு, பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில், பேரவையை எவ்வளவு நாட்கள் நடத்துவது மற்றும் எவ்வாறு அலுவல்களை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும். மறுநாள் 15-ம் தேதி, வேளாண்மைத் துறை அமைச்சர் வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். 17-ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் குறித்து உறுப்பினர்களின் விவாதம் ஆரம்பமாகும். 4 அல்லது 5 நாட்கள் நீடிக்கும் இந்த விவாதத்தில், நிதித்துறை அமைச்சர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றுவார். அதன் பிறகு, துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *