கனமழையால் பாதிக்கப்பட்ட விவாசிகளுக்கு நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அரசியல் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் வானிலை

பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் நிவாரண உதவியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வங்கக் கடல் மற்றும் அதனருகில் உள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கல் வலுப்பெற்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இக்கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை மழை நீர் சூழ்ந்து, சேதம் ஏற்பட்டுள்ளது.

  1. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.
  2. கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, 33% மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டால் ஹெக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும்.
  3. நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3,000 வழங்கப்படும்.
  4. நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விதைக்க 50% மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் வழங்கப்படும்.
  5. டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடை செய்ய 50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.
  6. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *