இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா கொண்டாட்டம்.

இந்தியா சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின கொண்டாட்டம் காசியாபாத்தில் உற்சாகமாக நடைபெற்றது. இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள கிண்டன் விமானப் படை தளத்தில் விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. விமானப் படை வீரர்கள் கம்பீர நடை போட்ட காட்சியை முப்படை தளபதி அனில் சவான் மற்றும் விமானப் படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஆகியோர் பார்வையிட்டனர். விமானப் படை தினத்தை முன்னிட்டு ரஃபேல், மிக் 29 உள்ளிட்ட போர் விமானங்களின் கண்காட்சியும் நடைபெற்றது. விமானப்படை தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *