விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 17 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பான சாதனைகளை படைத்த வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.முன்னாள் கால்பந்து வீரரான அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.அர்ஜுனா விருது இந்தியாவின் முக்கியமான விளையாட்டு விருதுகளில் ஒன்றாகும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி, தொடர்ந்து சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விளையாட்டில் திறமை மட்டுமின்றி, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் நீண்டகால பங்களிப்பும் விருது தேர்வில் கருத்தில் கொள்ளப்படுகின்றன.இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட அர்ஜுனா விருது பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அல்லது வீராங்கனை இடம்பெறவில்லை என்பது தமிழக விளையாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

