தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல்; 720 பேர், கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி

தமிழ்நாட்டில் கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படக்கூடிய கொடிய நோயாகும். இவ்வகை கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும். சமீப காலமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.குறிப்பாக கடந்த மே மாதம் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 4834 ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஜூலை 12-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 5,554 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *