புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் பேருந்தில் பயணிக்க இலவசம் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இனி அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி இன்று பதில் அளித்தார். அப்போது அவர் அரசு ஏற்கனவே அரசு பேருந்துகளில் ஆதிதிராவிட பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. இதனை அனைத்து மகளிர்க்கும் நீட்டிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் அனைத்தும் அனைத்து மகளிரும் அரசு பேருந்துகளில் இனி இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார்.