சையத் மோடி சர்வதேச பேட்மின்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று ஆரம்பமாகியது. இதில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் 4 வீரர்கள் இன்று நடைபெறும் முதன்மை சுற்றின் முதல் சுற்றில் களமிறங்க உள்ளனர். தகுதிச்சுற்றில் பெரும்பாலும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். மேலும், மலேசியா, இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் விளையாடினர். இன்று தொடங்கும் முதன்மைச் சுற்றில் இந்தியாவின் ஒற்றையர் பிரிவுகளில் பி.வி சிந்து, மாளவிகா மன்சூட், லக்ஷயா சென், ரவி, கிரண் ஜார்ஜ், ரகு மாரிசாமி, மிதுன் மஞ்சுநாத், சங்கர் முத்துசாமி, சதீஷ்குமார் கருணாகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இரட்டையர் பிரிவுகளில் சாத்விக்/சிராக், சஞ்சித்/அரவிந்த், அரிகரன்/ரூபன் குமார், தனிஷா/அஸ்வினி, கவிபிரியா/சிம்ரன் ஆகியோர் விளையாட உள்ளனர்.

