உலக பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் விளையாட்டு

உலக பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுஅசத்தியுள்ளார்.நார்வே நாட்டின் ஃபோர்டே நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மகளிர் 48 கிலோ பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 199 கிலோ (ஸ்னாட்சில் 84 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க்கில் 115 கிலோ) பளூ தூக்கி 2-ம் இடம் பிடித்தார். உலக பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். இதே பிரிவில் வட கொரியாவின் ரி சோங் முதலிடம் பிடித்து தங்க பதக்கமும், தாய்லாந்தின் தான்யாத்தோன் சுக்சரோயன் 3-ம் இடம் பிடித்து வெண்கல பதக்கமும் வென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *