வங்கக்கடலில் புதிய தாழ்வுப் பகுதி உருவாகியது

இந்தியா இயற்க்கை சுற்றுச் சூழல் செய்திகள் தமிழ்நாடு வானிலை

குமரிக்கடல் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை ஏற்கனவே பலத்ததாக இருந்த நிலையில், இக்குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.தென்குமரிக்கடல் பகுதியில் உருவான தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மிக கனமழை பதிவாகியுள்ளது.மேலும், வானிலை ஆய்வு மையம் புதிய புயல் சின்னம் (Cyclonic circulation) மீண்டும் உருவாகி வருவதாகவும், இதன் காரணமாக இன்று கூட பல இடங்களில் மழை தொடரும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *