நாடு முழுவதும் 10, 12 வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் நாளை தொடங்கின்றன; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

இந்தியா கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நாளை (பிப்.15) தொடங்குகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்க இருக்கிற தேர்வு மார்ச் 13-ம் தேதி நிறைவடைகிறது. அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.இந்த தேர்வினை 36 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்விற்காக நாடு முழுவதும் 877 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1. 30 மணிக்கு நிறைவடையும்.
குறிப்பாக டெல்லி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருவதால், டெல்லியை சுற்றி இருக்கும் மாணவர்கள் மட்டும் காலை 10 மணிக்குள்ளாகவே தேர்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *