நடன இயக்குநர் ஜானி போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் ஜானியின் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின் ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவுகளை செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது. தெலுங்கு திரை உலகில் மேலும் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு நிர்வாக குழு தடை விதித்துள்ளது . ஜானி பவன் கல்யாண் கட்சியில் இருந்து வந்தார் அவர் மீது புகார் எழுந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.புகார் அளித்த பெண்ணிற்கு 16 வயது இருக்கும் போது ஜானி அவரை பாலியல் பலாக்காரம் செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்திருந்தார் . மேலும் 40 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் அந்த பெண் சமர்பித்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் ஜானி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டு கைது செய்ய போலீசார் அவரை தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவான செய்தி கிடைத்தது. தொடர்ந்து தலைமறைவான ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோவாவில் தலைமறைவாக இருந்த அவரை தெலுங்கானா போலீசார் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
