வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். ஆடவர் ரிகர்வ் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பான் வீரர் நகானிஷியை எதிர்கொண்ட தீரஜ், போட்டி மிகவும் பரபரப்பாக சென்ற நிலையில் ஷூட் ஆஃப் முறையில் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினார்.இதன் மூலம் வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடவர் ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தீரஜ் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் இந்திய வில்வித்தைக்கு இது முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.ரிகர்வ் வில்வித்தையில் வீரர்கள் வில் மற்றும் அம்புகளை பயன்படுத்தி இலக்கை துல்லியமாக குறிவைத்து புள்ளிகளைப் பெறுகின்றனர். போட்டி சமநிலையில் முடிந்தால், வெற்றியாளரை தீர்மானிக்க ‘ஷூட் ஆஃப்’ முறை பயன்படுத்தப்படும். இதில் குறைந்த எண்ணிக்கையிலான வாய்ப்புகளில் அதிக துல்லியத்துடன் இலக்கை அடையும் வீரர் வெற்றி பெறுவார்.தீரஜ் பொம்மதேவராவின் இந்த வெற்றி, இந்தியாவின் இளம் வில்வித்தை வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.

