டெல்லி முஸ்தபாபாத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா சிறப்பு செய்திகள் விபத்துகள்

டெல்லி முஸ்தபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர். கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டுள்ளார். மேலும் 8 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து வடகிழக்கு மாவட்டத்தின் கூடுதல் டி.சி.பி. சந்தீப் லம்பா கூறியதாவது, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 8 முதல் 10 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல். மேலும், தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் டெல்லி போலீசாரின் குழுவினர் ,தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மேலும், டெல்லி தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *