புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் ஒரு மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை யை மேற்கொண்டனர் . சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததை அடுத்து போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.அதே நேரத்தில், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சில ஹோட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
