2026ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும்; ரயில்வே துறை அமைச்சர் தகவல்

அரசியல் இந்தியா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில் சேவை நடைமுறைக்கு வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 நடத்தி வரும் ரைசிங் பாரத் மாநாட்டில் பங்கேற்ற ரயில்வே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ரைசிங் பாரத் என்ற 2 நாட்கள் மாநாட்டை டெல்லியில் நியூஸ் 18 குழுமம் நடத்தி வருகிறது. இன்று காலை 10.30 மணிக்கு மாநாடு தொடங்கிய நிலையில் சிறப்பு விருந்தினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர். இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரையுடன் முதல் நாள் அமர்வு நிறைவு பெறும்.
நாளை பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்று பேசவுள்ளார்.ஏற்கனவே 3 முறை ரைசிங் பாரத் மாநாட்டி நியூஸ் 18 குழுமம் நடத்தியுள்ளது. இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெறுகிறது. முதல் நாள் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், பல்துறை வல்லுனர்கள் பேசவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *